பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

From our Blog

கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஹிந்துக்களே ஆபத்து !

Tamil Hindu 01-04-18
Tamil hindu 01-04-18

ஹிந்துக்களே ஆபத்து !


ஹிந்துக்களே உங்களுக்கு ஆபத்து முஸ்லிம்களால் , கிறித்துவர்களால் , கம்யூனிஸ்ட்களால் , நாத்திகர்களால் என்று கேட்டு கேட்டு பாசிச வெறியேற்ற பட்ட உங்களுக்கு உங்களின் உண்மையான ஆபத்து எதுவென்று தெரியாமல் போயிருக்கலாம். செய்திகளின் பக்கங்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் செய்தி ஓன்று தான் நீ என்றுமே தாழ்த்தப்பட்டவன் நீ என்றுமே எங்களுக்கு அடிமை.

இவர்களின் சூழ்ச்சி அறியாமல் இவர்கள் வலையில் நீங்கள் விழலாம். ஆனால் உண்மையில் நிதர்சனம் எதுவென்று பாருங்கள்.

ஒரு மத்திய அமைச்சர் தலித்துகளை நாய் குறைப்பது போல் என்கிறார். பாஜக ஆளும் குஜராத்தில் குதிரையில் சென்றதற்காக ஒரு வாலிபன் கொல்லப்படுகிறான் .

ஒரு வேலை வடநாட்டில் அந்த வாலிபன் ஒரு முஸ்லிமால் கொல்லப்பட்டால் இந்நேரம் செய்திகள் எப்படி உலா வந்து இருக்கும்.அதற்கு முட்டு கொடுக்க பாசிசவாதிகள் தங்களின் லெட்டர் பேடுகளை கொடூர வார்த்தையால் அலங்கரித்து கொண்டு இருப்பார்கள். இந்துகளுக்காக போராடும் அமைப்புகள் நடத்தும் தலைவர்களோ இந்நேரம் பேரணிக்கு தாயாராக கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு இந்து ஒரு இந்துவால் கொல்லப்பட்டால் செய்தி எப்படி வருகிறது பார்த்தீர்களா ? உயர் சாதியினரால் கொல்லப்பட்டார் என்று அப்பம் அவர் இந்து இல்லையா ?

பாசிசவாதிகளால் ஒரு முஸ்லீம் , முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்படலாம். ஒரு கிறிஸ்துவன் , கிருஸ்துவன் என்பதால் கொல்லப்படலாம். ஆனால் ஒரு ஹிந்து , ஹிந்து என்பதால் கொல்லப்படமாட்டான் கீழ் சாதி என்பதால் கண்டிப்பாக கொல்லப்படுவான்.

அதை தான் சரித்திரம் எங்கும் கண்டுகொண்டிருக்கிறோம் .
பண்டைய இந்தியாவில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.
தனது எல்லா பேட்டிகளிலும் SV சேகர் கூறுகிறார். எங்கேயாவது ஒரு பிராம்மணன் ஒரு கம்யூனல் கிளாஷ்க்கு காரணம்ன்னு சொல்ல முடியுமா ஒரு பிராமணன் மேல ஒரு FIR இருக்கா என்று கேட்கிறார்.

இந்த வார்த்தையை நீங்க திரும்ப திரும்ப கேட்ட உங்களுக்கே விளங்கும். எந்த கலவரத்திலேயும் அவர்கள் கைது ஆவதில்லை பிள்ளையார் ஊர்வலத்தில் முன்னே நின்னு கோஷம் போடுவதில்லை . அப்படி துவேஷ கோஷங்கள் போட்டு கலவரம் ஏற்பட்டு ஜெயிலுக்கு போறவன் யார் பிராமணனா ?அல்லது அப்பாவி இந்துக்களாகிய நீங்களா யோசித்து பாருங்கள் ?

ஆனால் அர்ஜுன் சம்பத் போன்றவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் தயானந்த சரஸ்வதி போன்ற உயர் குலத்தோரே சென்ற ஆண்டு மாட்டை ஏற்றி சென்ற செந்தில் என்பவரை முஸ்லீம் என்று நினைத்து தாக்க சென்றவர்கள் யார் ?
மன்னார்குடி ஜீயர் இப்படி ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். ஹிந்துக்களே உங்களை நோக்கி இந்த பாசிசவாதிகளால் வந்து கொண்டிருக்கும் ஆபத்தை உணராமல் இவர்களிடம் நீங்கள் வீழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் . இவர்களின் சூழ்ச்சி தெரிந்தவர்கள் தப்பித்து கொள்கிறார்கள். இறுதியாக ஒன்றே ஓன்று தான் இந்துகளே உங்களுக்கு ஆபத்து ! முஸ்லிகளாலோ கிருஸ்துவர்களாலோ நாத்திகர்களாலோ இல்லை பிரமணியத்தினால் ... குறிப்பு : எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் அல்ல. பிராமணிய கோட்பாட்டில் இந்த நாடு இயங்க வேண்டும் நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட பாசிசவாதிகளால் மட்டுமே ஆபத்து.
- ஏர்வை ஹசன் நன்றி : தமிழ் இந்து நன்றி : பூங்குன்றன்






ஞாயிறு, 25 மார்ச், 2018

நான் - VEG


நான் - VEG

-------------------------------------------------------------------------
நண்பர் : பாய் non-veg சாப்பிடறவங்களுக்கு சகிப்புத்தன்மை ரொம்ப குறைவாம் அப்படின்னு ஒரு article படிச்சேன் . 

ஓ அப்படியா ? இந்த வருசத்துல எத்தன கல்யாண வீடு போயிருபிங்க 

நண்பர் : ஒரு 3 கல்யாண வீடு attend பண்ணிருப்பேன்.

அதுல எத்தனை பாய் வீடு கல்யாணம் எத்தனை பாய் இல்லாத வீடு கல்யாணம் ?

நண்பர் : 2 பாய் வீடு

அப்பம் பாய் வீட்டு கல்யாணத்துல பிரியாணி வச்சு மாட்டி இருபிங்களே

நண்பர் :அட நீங்க வேற நான் சுத்த சைவம் பாய் .

அப்பம் பாய் வீட்ல என்ன சாப்பிட்டிங்க ?

நண்பர் : அதான் பாய் வீட்டு கல்யாணத்துல சைவ சாப்பாடு தனியா வச்சி இருந்தாங்களே.

ம்ம்.. அசைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா சைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அப்பம் பாய் அல்லாத ஒரு கல்யாண வீட்டுக்கு போனிங்களே அங்க சைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா அசைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்களா ?

நண்பர் : அது எப்படி சைவம் அசைவமும் ஒன்னா வைக்க முடியும் ?

ம் அப்பம் சகிப்புத்தன்மை யாருக்கு அதிகம் ? 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அலி பாயும் ஆட்டு குட்டியும்

ஊருக்கு போகும் போது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் வந்த ஆங்கில கதையை பேசி கொண்டு இருக்கும் போது அதே கதையை ஊர் போய் திரும்பி வந்து தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து போட்ட கதை இது.


அலி பாயும் ஆட்டு குட்டியும் 

--------------*****----------------------

அலி பாய் பார்க்க ரொம்ப அப்பாவியான மனுஷன் , பொண்டாட்டி எப்பம் பார்த்தாலும் கரிச்சி கொட்டிகிட்டே இருப்பா.

"இது லாம் ஒரு வீடா இங்க நிம்மதியா தூங்க கூட முடியல " இது தான் அலி பாய் பொண்டாட்டியின் மாமுல் பொலம்பல்.

மனுஷன் பொருத்து பொருத்து பார்த்து கடைசியா அந்த முஹல்லாஹ் ஆலிம்சாட்ட போய் தன் குறையை கொட்டி தீர்த்தார்.

எல்லா விசயத்தையும் பொறுமையா கேட்டுவிட்டு ஆலிம்சா கேட்டாரு உன் வீட்ல எத்தனை ஆடு இருக்கு இவரு சொன்னாரு 20 ஆடுன்னு , சரி அந்த இருபது ஆடையும் இரவு ஆனா உன் வீட்டுகுள்ள 40 நாள் அடைச்சி வை .

அலி பாயும் ஆலிம்சா சொன்ன மாதிரி இரவு ஆனா இருபது ஆட்டையும் வீட்ல அடைத்து வைத்தார்.
வழக்கத்தை விட இப்பம் பொண்டாட்டி பொலம்பல் இன்னும் அதிகமானது " மனுஷன் படுக்கவே இங்க இடம் இல்ல இதுல ஆடு வேறயா"

நாட்கள் ஆக ஆக பொலம்பல் கூடி கொண்டே போனது , மீண்டும் ஆலிம்சாவிடம் வந்து விசயத்தை சொன்னார் , ஆலிம்சா சொன்னார் 40 நாள் முடியட்டும் அப்புறம் ஆட்டை எல்லாம் வழக்கம் போல வெளிய விட்டுவிட்டு தூங்க செல் .

40 நாட்களும் கழிந்தது வழக்கம் போல ஆட்டை வெளியே கட்டிவிட்டு வீட்டில் உறங்க சென்றார் ,

மனைவி பெரும் மூச்சு விட்டு சொன்னாள் அப்பா இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு எவ்வளவு ராகத்தா இருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேர் இப்படி தான் இருக்கிறோம் நமக்கு கொடுக்க பட்ட அருளை பற்றி எண்ணுவதில்லை அதை விட பெரியதை பற்றியே சிந்திக்கிறோம் , நாம் இருப்பதை விட கீழ் நிலைக்கு செல்லும் போது தான் நாம் இருந்த நிலையின் அருமையை உணர்கிறோம்.

அது போல் நமக்கு வரும் எந்த துன்பமும் நிலையானது அல்ல

" நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."

இறைவேதம் ( அத்தியாயம் 94: வசனம் 5)

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இலவசமா கொடுக்க இது என்ன கவர்மென்ட் (அரசாங்க) சொத்தா ?

சாதாரணமா நாம தனியார் பள்ளிகூடத்தில்  ஒரு புத்தகத்துக்கு  ஏன்ப்பா இவ்வளவு காசு வாங்கிரனு  கேட்டா அவன் சொல்லுவான் freeயா கொடுக்க இது என்ன கவர்மென்ட் ஸ்கூலான்னு ?  

எங்கயாவது  தனியார் ஆஸ்பத்திரியில வெறும்    மாத்திரைக்கு இவ்வளவு  காசா  என்று கேட்டா அவன் சொல்லுவான்   freeயா கொடுக்க இது என்ன கவர்மென்ட் ஆஸ்பத்திரியா ?

கடையில்  என்னப்பா கோதுமை இவ்வளவு விலை சொல்ற என்று கேட்டா
அவன் சொல்லுவான் வேணும்னா வாங்கிக்கோ இல்லன்னா கவர்மென்ட் ரேஷன்  கடைல  போய்  வாங்கிக்கோ 


இப்படி அன்றாடம்  நம் வாழ்கையில் பல சம்பவங்களை பார்கலாம்.

மொத்தத்தில் இலவசம், சலுகை என்றாலே அது அரசாங்கத்தால் மட்டுமே தர முடியும் என்ற ஒரு விதி எல்லாருடைய  பொது புத்தியிலும் பதிந்து உள்ளது .அது தான் ஒரு உண்மை அரசாங்கத்தின் பணியும் கூட ...

தற்போது  நாட்டின் நிலைமை என்னவாக இருக்கிறது ?

இலவசமாக  கொடுக்க வேண்டிய அரசாங்கம்  நம்மிடமிருந்து  காசை பிடுங்குகிறது . அதிகமாக வாங்க வேண்டிய தனியார் நமக்கு சலுகை தருகிறது.

என் அனுபவத்தில் இருந்தே இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். என்னிடம் கடன் வாங்கின நபர் எனக்கு அந்த பணத்தை சென்னையில் தேனாம்பேட்டையில்  இருந்து எனது SBI வங்கிக்கு வைப்பு (Deposit) செய்கிறார் என்னுடைய கணக்கில் இருந்து அதற்காக 25ரூபாய் எடுக்கபடுகிறது வேறு  கிளை  என்பதால் ( என்னுடையது ஆயிரம் விளக்கு கிளை ).

இதே பணத்தை தனியார் வங்கி மூலம் பரிவர்த்தனை செய்தால் இலவசம்.



சமீபத்தில் நடந்த இரண்டு  சம்பவங்கள்


1. ஜியோ

சாதரணமாக  ஒரு ஜிபி நெட் பேக்  போடுவதற்கு ரூ250 செலவாகிறது . ஆனால் ஜியோ நெட் மற்றும் கால் அனைத்தையும் இலவசமாக தர வழங்குகிறது . இதில் மிக பெரிய கொடுமை என்னன்னா  இத்தகைய இலவசங்களையும் டிஜிட்டல் இந்தியாவின்  முகமாக செயல்படவேண்டிய  அரசாங்கத்தின் BSNL நிறுவனமோ அகல பாதாளத்தில் சென்று கொண்டு இருக்கிறது ஆனால் தனியார் நிறுவனமோ இதை டிஜிட்டல் இந்தியா புரட்சி என்கிறது பிரதமரின் படத்துடன் ...
உண்மையில் இது டிஜிட்டல் இந்தியா அல்ல இது Digital India (Pvt ltd).


2.PayTm

அரசாங்கம் நவம்பர் 8 ஆம் தேதி  நள்ளிரவு முதல் 500ரூபாய்  1000 நோட்டுகள் செல்லாது என்கிறது .

நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து செய்திதாள்களிலும் PAYTM விளம்பரம் முழு பக்கத்திற்கு பிரதமரின் படத்துடன் வருகிறது .

அதன் பின் அநேக கடைகளில் இங்கு PayTm Accepted Here என்ற லேபிள்களை பார்க்க முடிகிறது .



இதே அரசாங்கம் நினைத்தால் அரசுக்கு என்று ஒரு செயலியை (Application) உருவாக்கி PayTmற்கு நிகரான ஒரு சேவையை வழங்கி இருக்க முடியாதா? இல்லை அதற்கான பணம் தான் அரசாங்கத்திடம் இல்லையா ?

(சமீபத்தில் RTIயில் பெறப்பட்ட தகவலின் படி பிரமரின் ஒரு நாள் விளம்பர செலவு மட்டும் சுமார் 2 கோடி .)

cashless இந்தியா என்று நாடே கூவி கொண்டு இருக்கிறது ஆனால் இந்திய அரசு வழங்க வேண்டிய cashless இந்தியாவை சீனா செயலி வழங்கி கொண்டு இருக்கிறது .


இன்றளவும் அரசு ATM கள் பெரும்பாலும்  மூடி  இருக்கிறது தனியார் ATMகள் முன் மக்கள் அலை மோதுகிறார்கள் .

இவை எல்லாம் எதை காட்டுகிறது ?

 இவை நாடு கொஞ்சம்  கொஞ்சமாக அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து கொண்டிருப்பதை காட்டுகிறது.

இன்னும் கொஞ்ச நாளில் அனைத்தும் தனியாரின் கட்டுபாட்டில் வந்து விடும் அவர்களே நாட்டின்  அனைத்தையும் நிர்ணயிக்க கூடிய சக்தியாக இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை .



ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மேஸ்திரியும் மேலாளரும்





கட்டிட வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்த அந்த கட்டடத்தில் மேலாளர் ஐந்தாம்  மாடியிலும் மேஸ்திரி முதலாம் மாடியிலும் பணி புரிந்து கொண்டு இருந்தார்கள் .

மேலாளர் மேஸ்திரியை அழைக்க நாடினார்  ஆனால் அங்குள்ள இரைச்சலின் காரணமாக மேஸ்திரியின் காதில் அவரது அழைப்பு விழவில்லை பின் மேஸ்திரியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப மேலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை போட்டார் மேஸ்திரி அதை எடுத்து விட்டு மீண்டும் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பின் மேலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை போட்டார் அதையும் எடுத்து விட்டு தன் பணியை தொடர ஆரம்பித்துவிட்டார் . பின் கடைசியாக மேலாளர் மேலிருந்து ஒரு கல்லை போட்டார் உடனே அது மேஸ்திரியின் மேல் விழுந்து அவருடைய கவனத்தை மேலாளர் பக்கம் திருப்பியது.

இதுவே நம் வாழ்க்கை , இறைவன் தன்னை நினைவு கூறுவதற்கு சிறு நன்மைகளையும் பெரும் நன்மைகளையும் நமக்கு அருள் புரிகிறான். உலக வேலையில் நாம் அதை பெற்று கொண்டு விட்டு கண்டும் காணமால் மீண்டும் நாம் உலக வாழ்க்கையின் பிஸியாக ஆகிவிடுகிறோம்.

பின் நமக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது இறைவனை தொடர்பு கொள்கிறோம்.


இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்

"மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. "

( அல்-குர்ஆன் 10:12)

செவ்வாய், 19 நவம்பர், 2013

பெண்ணுரிமை

தலைப்புக்கு போறதுக்கு முன்னாடி ஒரு நடந்த சம்பவத்தை உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன் .

கனடா நாட்டில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையில் சரியான understanding இல்லமால் வாழ்ந்து வந்தனர் .இதனிடையில் கணவன் ரகசியமாக தன் காதலியை சந்தித்து பழகி வந்தான். சிறிது காலம் போக போக மனைவிக்கு சந்தேகம் வலுத்தது. ஏஜென்ட் மூலம் துப்பறிந்து விசயத்தையும் கண்டுபிடித்துவிட்டாள்.

கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு மனைவி பின் தொடர்ந்து போய் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தால் அடுத்த நிமிடமே போலீஸ் வீட்டை சுற்றி வளைத்தது .உள்ளிருந்த கணவனுக்கு பயம் பற்றி கொண்டது காதலி கூலாக சொன்னாள் நீ எதற்கும் கவலைபடாதே நான் பார்த்து கொள்கிறேன் என்று .

கதவை திறந்த உடன் காவலாளி சொன்னார் "யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்" உங்கள் மனைவி உங்கள் மீது புகார் தெரிவித்து உள்ளார் நீங்கள் இன்னொரு பெண்ணை மணந்ததாக என்று .காதலி கூலாக தன் ID கார்டுஐ (விபச்சாரம் செய்வதற்குரிய ID card) எடுத்து காட்டி சொன்னால் "He is my customer " என்று . வந்த போலீஸ் சொன்னார்கள் சாரி மேடம் , enjoy your Day என்று .

சரி அந்த ஊரில் தான் அப்படி என்றால் நம் நாட்டிலும் சட்டம் அப்படி தான் , ஒருவன் யாரோட வேண்டும் என்றாலும் உறவு கொள்ளலாம் ஆனால் முறையாக திருமணம் செய்தால் சட்டப்படி அவரை கைது செய்யலாம் .

என்றாவது நீங்கள் வாசிக்கும் செய்திதாளை படித்தது உண்டா வேறு பெண்ணுடன் விபச்சாரம் செய்த கணவர் மீது புகார் கணவன் ஜெயிலில் அடைப்பு என்று ? ஆனால் நீங்கள் பார்க்கலாம் இரண்டாம் திருமணம் செய்தவர் கைது என்று .மொத்தத்தில் பெண்களை use and through மாதிரி உபயோகபடுத்தி கொள்ளலாம் என்ற சித்தாந்தமே மேலோங்குகிறது . அதன் விளைவு தான் விபச்சாரம் .

ஆனால் இஸ்லாம் சொல்கிறது நீங்கள் 4 திருமணங்கள் வரை முடிக்கலாம் என்று அதுவும் கண்டிசன் அடிப்படையில் . எல்லா மனைவிகிட்டேயும் சமமாக நடந்தால் மட்டுமே இல்லையேல் ஒன்றே உங்களுக்கு சிறந்தது என்று .இஸ்லாம் பெண்களை இதன் மூலம் விபச்சாரத்தின் பக்கம் தள்ளவில்லை . பெண்களை use and through கலாச்சாரத்தில் பார்க்காமல் அவர்களுக்குகாண முழு பொருட்ப்பையும் வழங்குகிறது .

என்னதான் இந்த நாட்டில் முதல்வர் பதவியிலே இருந்தாலும் இரண்டு மனைவி வைத்து இருந்தால் நாட்டின் சட்டப்படி அதிகாரபூர்வமாக மனைவி என்று சொல்ல முடியாது அதனால் தான் பத்திரிகையில் எழுதும் போது கூட மனைவி என்றும் துனைவி என்றும் பிரித்து எழுதுவதை நீங்கள் பார்க்கலாம் .

ஆனால் இஸ்லாம் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து அந்த பெண்ணுக்கு அதிகாரபூர்வமாக சொத்தில் பங்கு கிடைக்க செய்கிறது .

இந்த உலகம் ஆகுமானதை (திருமணம்) பாவமாகவும் விலக்கபட்டதை ( விபச்சாரம் ) ஆகுமானதவாகவும் கருதுகிறது .

மனிதனின் நிலையை உணர்ந்து எக்காலத்திற்கும் பொருந்த கூடிய இறைவனின் சட்டத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் .

புதன், 23 அக்டோபர், 2013

அமைதி மார்க்கம்

பல வகையான இன, மத மக்கள் வாழ கூடிய ஒரு நாட்டில் நானும் வாழ்கிறேன் . ஒவ்வொரு மதத்தவரும் தங்களது பண்டிகைகளை கொண்டாடும் போது அவர்கள் நடத்தும் ஊர்வலத்தையும் அதற்கான ஒரு பெரிய பாதுகாப்பையும் பார்க்க முடிகிறது.

இந்த நாட்டில் பெரும்பாலான கலவரங்கள் சில நூறு கணக்கில் கூடுகிற சாதி ,மத ஊர்வலங்களால் நடப்பதை பார்க்கிறேன் . ஆனால் லட்ச கணக்கில் முஸ்லிம்கள் கூடுகின்ற இரு பெருநாட்களிலும் , ஆயிர கணக்கில் முஸ்லிம்கள் கூடுகின்ற வெள்ளிகிழமைகளிலும் ஒரு சிறு அசம்பாவிதமோ மக்களுக்கு இடையூறு செய்ய கூடிய ஒரு காரியத்தையோ பார்க்க முடியவில்லை மாறாக அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை வெளிபடுத்துவதையே பார்க்கிறேன் .

ஒரு சிலைக்கு இரண்டு பாதுகாவர்கள் இருந்து கூட நான் பார்த்ததுண்டு. ஆனால் ஆயிர கணக்கில் மக்கள் கூடும் வெள்ளிகிழமை அன்று மசூதியின் வாசலின் முன் ஒரு காவலரை கூட பார்த்தது இல்லை .

மதம் என்பது அமைதியை போதிக்க கூடியதாகவும் பிற சமுகத்திற்கு இடையூறு அளிக்கமாலும் இருக்க வேண்டும் . இப்படி பட்ட சூழ்நிலையை நான் இஸ்லாத்தில் பார்க்கிறேன் .

ஞாயிறு, 7 ஜூலை, 2013

சிந்திக்க சில நிமிடம்

அன்பிற்கினிய என் இந்து சகோதரர்களே,

அமெரிக்க நிறுவனம் இந்து கடவுளை அவமதித்து விட்டது
குஷ்பு இந்து கடவுளை அவமதித்து விட்டார்
தோனி இந்து கடவுளை அவமதித்து விட்டார்
இவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிக பெரிய சல சலப்பு ஏற்பட்டது

சமீபத்தில் கண்ட இரு வேறு காட்சிகளை உங்களிடம் பகிற ஆசை படுகிறேன் . வாரம் வாரம் தினத்தந்தி வெள்ளிகிழமை பேப்பர் உடன் ஆன்மீக இதழும் சேர்ந்தே வரும் அதில் முதல் பக்கத்தில் இந்து கடவுளின் உருவம் பொறித்த பெரிய படம் முகப்பு படமாக இடம் பெறும்.

ஒரு நாள் இதன் பிரதியை ஹோட்டலில் வடை சாப்பிடும் போது எண்ணெய் புழியகூடிய பேப்பர் ஆக பார்த்தேன் . பின் ஒரு நாள் ஒரு தாயி தன் குழந்தையின் கழிவை நீக்க அந்த பேப்பர் பிரதியை உபயோக படுத்துவதை பார்த்தேன் .

மேற்கத்தியர்கள் மட்டும் தான் இந்து கடவுளை அவமான படுத்துகிறார்களா ? அன்றாட தமிழ் பத்திரிகைகள் இல்லையா ?

பூஜை அறையில் இருக்க வேண்டிய சாமியை கையில் மோதிரமாகவும் கழுத்தில் செயினாகவும் போட்டு கொண்டு தினமும் கழிவறைக்குள் செல்பவர்கள் அவமான படுத்த வில்லையா ?


இப்படி கடவுள் அவமான படுத்த படுகிறார் .ஆனால் கடவுளின் பரிணாமத்தை பற்றி
ரிக் வேதம் என்ன சொல்கிறது ?
யஜுர் வேதம் என்ன சொல்கிறது?

பாருங்கள் காணோளியை http://www.youtube.com/watch?v=ROhEs09ifE0

புதன், 10 ஏப்ரல், 2013

தலையை கவனியுங்கள்

எப்போதும்பரட்டைத்தலை ,குப்பென்று வீசும் வியர்வை வாடை இவைகளை மொத்த குத்தகைக்கு எடுத்தாற்போல் சுத்துவார்கள் கேட்டால்

"வெளித்தோற்றத்துல ஒன்னுமே இல்லைங்க.. மனசு சுத்தமா இருந்த அதுவே போதும் "

என்று தத்துவம் பேசுவார்கள்.

லிப்ட் ல இறங்கும் பொது கொஞ்சம் கண்ணாடிய பார்த்து தலை சீவிற கூடாது உடனே பக்கத்துல இருகிறவன் சொல்வான்மனசுல இவர்க்கு இன்னும் 18வயசுனு நினைப்பு ஒரு புள்ளைக்கு தகப்பான ஆகியாச்சு இன்னும் அலங்காரத்தை பாரேன் என்று விமர்சனம் பேசுவார்கள்

இந்த மனிதர்களை என்னவென்று சொல்ல?? இவர்களுக்கு மனிதர்களுடன் வாழ தெரியவில்லை .மனிதச் சுபாவங்களை புரிந்து ,தங்களையும் தங்கள் வாழ்க்கையையும் அழகுபடுதிக்கொள்ள தெரியவில்லை ..
இவர்களுக்கு அழகுணர்ச்சி மரத்து பொய்விட்டது .அதனால் அழகை விரும்ப தெரியவில்லை
அண்ணலார் நபிகள் நாயகம்(ஸல் ) அழகை விரும்பினார்கள் அதோடு அல்லாஹும் அதை விரும்புகிறான் என்றார்கள் .

அண்ணலார் (ஸல் ) மஸ்ஜிதில் இருந்த சமயம் .

பரட்டை தாடி தலைமுடியோடு வந்தார் ஒருவர்.

"சீர்படுத்தி வாருங்கள் " என்று அவரிடம் சாடை காட்டினார்கள் அண்ணலார் (ஸல் )

அவர் அப்படியே செய்துவிட்டு திரும்பி வந்தார் . தாடியும் தலையும் சீராக இருந்தது.இப்போது அண்ணலார் (ஸல் ) சொன்னார்கள்:

"ஒருவர் தலைவிரி கோலமாக ஷைத்தான் போல வருவதைவிட இது சிறந்ததல்லவா??"(முஆதா 1702)

ஷைத்தான் அலங்கோலமான தோற்றம் கொண்டவன் .நாம் அவனைப்போல் இருக்கக்கூடாது .அழகான தோற்றத்தில் இருக்கவேண்டும் .எண்ணெய் தேய்த்து தலைவாரி,தாடியை வாரி சீராக இருக்கவேண்டும். என்று நபி (நாயகம் (ஸல்)சொன்னார்கள் .

செவ்வாய், 26 மார்ச், 2013

கடவுளை ஏன் இழிவு படுத்துகிறீர்கள் ?

பாஸ் உங்கள்ட ஒன்னு கேட்ட கோப பட மாட்டிங்களே .

நண்பர் : என்ன பாய் உங்கள்ட போய் கோப படுவான கேளுங்க பாய்

நான் உங்கள் கடவுளை கழிவறையில் புகைப்படமாக எடுத்து மாட்டி வைத்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்

நண்பர் ( கோபத்துடன் ) : பாய் ? உங்களுக்கு என்ன ஆச்சு திடீர்னு இப்படி எல்லாம் கேகுரிங்க

பரவயில்லை மனசுல பட்டத சொல்லுங்க

நண்பர் : கண்டிப்பா எனக்கு உங்க மேல கோபம் வரும் அடிக்க கூட செய்யலாம் .

ம்ம் ... ஆனால் அதை கடவுள் உருவ படம் போட்ட மோதிரத்தை கையில் பக்தியோடு போட்டு இருக்கும் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிவறை சென்று வருகிறீர்கள் .

தாயத்து என்று வாங்கி வந்தீர்கள் அதை பூஜை அறையில் வைத்தீர்களா இல்லை இடுப்பிற்கு கீழே கட்டினீர்களா ? கடவுள் அருள் பொருந்திய தாயத்தை கட்ட வேண்டிய இடமா அது?


நண்பர்: ................................ பாய் நீங்க கூட தாயத் லாம் போடுறீங்க

தாயத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது மனிதனின் பகுத்தறியும் ஆற்றலை அப்படியே குழிதோண்டிப்புதைக்கும் அனைத்துக் காரியங்களையும் இஸ்லாம் வன்மையாகத் தடைசெய்கின்றது. அன்றைய மக்களிடம் காணப்பட்ட சகுணம் பார்த்தல்,தாயத்து முடிதல்,பறவைச் சகுணம்,பலிபீட நேர்ச்சை, தீமிதித்தல், தனது உடலை தானே வருத்துதல் போன்ற அத்தனை கொடுமைகளும் மதத்தின் பெயரிலேயே நடைபெற்று வந்தன.அத்தனையையும் பேரறிஞர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தடைசெய்தார்கள்.

இஸ்லாம் இவ்வாறு சொல்கிறது

தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான். '' (முஸ்னத் அஹமத்)

தாயத்து கட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

திவீரவாதம் மதம் சார்ந்ததா?

நண்பர் :பாய் நீங்க நல்ல தான் பேசுறிங்க ஆனால் fact என்னன்னா

All Muslims Are Not Terrorist But All Terrorists Are Muslims.

அப்படியா எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் .

நண்பர் : ஆம பாய் புள்ளி விவர படி நீங்க பார்த்திங்கனா தீவிரவாதி எல்லாம் முஸ்லிம் தீவிரவாதியா தானா இருக்காங்க

அப்பம் இனி மேல் இருந்து உங்களை நான் rapist என்று கூப்பிடலாம் என்று இருகிறேன்.

நண்பர் (சற்று கோபத்துடன் ): என்ன பாய் ?

ஆமாம் உங்களுடைய புள்ளி விவர படி சராசரியாக இந்தியாவில் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவர்களில் இந்துகள் தான் உள்ளனர் . நீங்கள் படிக்கும் தின தந்தி பேப்பரை சாட்சி ! தமிழ்நாட்டில் வினோதினி முதல் இன்று கற்பழிக்க பட்ட 13 வயது சிறுமி வரை எல்லாம் இந்துகள் தானே.
அதற்காக நான் இவ்வாறு கூற முடியுமா?

All Hindus are not rapist but all rapist are Hindus

நண்பர் : ?????

எந்த ஒரு செயலுக்கும் குறிபிட்ட மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது .

https://www.youtube.com/watch?v=mndFPR4pL-c

https://www.youtube.com/watch?v=pjpPHr_ntVk ( English)

https://www.youtube.com/watch?v=hUPwWOROrSA ( Tamil )

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வாய்மையுடன் வாய் சுத்தம்

அம்மா ஸ்ட்ராங்க ஒரு பெட் காபி . இன்றைய படித்த இளைஜனின் படுக்கை அறையில் இருந்து காலையில் கேட்கும் ஒரு ஓசை . இது தான் இன்றைய நாகரீகம் கற்று தந்தது .

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் " பல் துவக்குவது வாயை சுத்தப்படுத்துகிறது .இறைவனின் மகிழ்ச்சிக்கு காரணமாகிறது " (முஸ்னது அஹமத் 7)
இப்படி ஆர்வமூட்டினார்கள். ஆகவே தான்,


=> தூக்கத்தில் இருந்து எழுந்ததும் பல் துலக்கு குச்சியை தூகிவிடுவார்கள்(ஷஹீஹ் முஸ்லிம் 426)

=> வெளியே போய் வீடிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக பல் துவக்குவதே அவர்களின் வழக்கமாக இருந்தது (ஷஹீஹ் முஸ்லிம் 424)

=> உயிர் பிரிய இருந்த கடைசி நிமிடங்களிலும் பல் துவக்கினார்கள் (ஷஹீஹ் புகாரி 4449)

ஆன்மிகத்தின் பெயரால் வருடக்கணக்கில் பல் துவக்காமல் வாயை துண்டுத்துனியால் பொத்தி கட்டிக்கொல்வோரை பார்த்திருப்பீர்கள்.
இவர்கள் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக வாயிலுள்ள கிருமிகளை கொள்வதில்லை என்று சொல்கிறார்கள் .பல் துவக்காமல் அவைகளை வளர்த்து, அருகில் உள்ளோர்களை துன்புறுத்துகிறார்கள்'.

நபிகளாரின் தோழர்கள் சிலர்,சமைக்கப்படாத வெங்காயம்,பூண்டு,சீமைப்பூண்டு இவற்றை சாப்பிட்டார்கள் . அதற்க்கு நபி (ஸல் ) கூறினார்கள் " இவ்வாறு சாப்பிட்டு விட்டு நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.ஏனெனில்,மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகிறார்கள்.(ஷஹீஹ் முஸ்லிம் 976)

சாப்பிட அனுமதிக்கப்பட்ட உணவாக இருந்தாலும்,அதன் துர்வாடையால் மனிதர்களுக்கு தொல்லை என்றால்,சபிட்டவர் வீட்டிலயே தொழட்டும் என்றார்கள் நபிகளார் (ஸல்).

கொஞ்சம் சிந்தியுங்கள். பீடி,சிகிரெட் குட்கா,பான்பராக் என்று ஈரக் கொலையில் புற்று நோயைக் கொண்டு வரும் அசுத்த வாயுடன் அலைவோருக்கு என்ன சட்டம்?இவர்கள் தங்களையும் நாசமாகி,மற்றவர்களையும் நாசப்படுதுகிரார்கள்.

பொதுவாக ஆன்மிகவாதிகள் வாய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.ஆனால் நபிகளார் (ஸல்) வாய்மைக்கும் மட்டும் அன்றி வாய் சுத்தத்திற்கும் முக்கியத்துவம் கொத்தார்கள்.

இன்றைய மருத்துவமும் பல்லுக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பை சொல்கிறது அதுமட்டுமில்லாமல் பல் துலக்குவதற்கும், மறதி நோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இந்தச் சுத்தத்தின் அருமை பெருமைகளை மெத்த படித்த பல் டாக்டர்கள் மேசுவதற்கு முன்பே நபிகளார் (ஸல்) இதில் அழகிய முன்மாதிரியை காட்டினார்கள் .

முகநூல் நண்பர்களே உங்களுடன் ஒரு நிமிடம்

என் பாசத்திற்குரிய முகநூல் நண்பர்களே உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக !

கடந்த சில நாட்களாகவே முக நூலில் விஸ்வரூபம் பற்றிய செய்திகள் மிக பெரிய விஸ்வரூபத்தை எட்டி உள்ளது பெரும்பாலான நண்பர்களின் status களில் ஓன்று இந்த படம் பற்றிய ஆதரவு இருக்கிறது இல்லை எதிர்ப்பு இருக்கிறது . இன்னும்

வெளிபடையாக சொல்ல போனால் முஸ்லிம் சகோதரர்கள் எதிர்ப்பும் மாற்று மத நண்பர்கள் ஆதரவும் என்றுமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள் . கிட்ட தட்ட ஒரு பனி போரை முக நூலில் நடந்து கொண்டு இருக்கிறது .

இந்த சந்தர்பத்தில் முகநூல் நண்பர்களில் இந்த இரண்டு சாரார்க்கு ஒரு விசயத்தை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன் .

முதல் சாரார் என் அருமை மாற்று மத சகோதரர்கள் :
எல்லோரையும் போல நீங்கள் எதிர் பார்த்து கொண்டு இருந்த திரைப்படம் வர வில்லையே அதற்கு காரணம் இந்த பாய்மார்கள் தான் நீங்கள் கூறுவது கேட்கிறது .ஒரு சிலரின் முக நூலில் உள்ள காரமான பேச்சும் கடினமான பேச்சும் உங்களை இந்த பாய்

மார்களே இப்படி தான் என்று எண்ண கூட வைத்து இருக்கலாம் .

நான் போஸ்டரில் போட்ட அந்த ஒரு நிமிடத்திற்கு வருகிறேன் என்னுடன் இந்த ஒரு நிமிடத்தை நீங்கள் ஒரு நடுநிலைவாதியாக செலவிடுங்கள் எந்த வித சிந்தனை சிதைவும் இன்றி பயணியுங்கள் .

கால் சென்டரில் வேலை செய்யும் ஒரு பணி பெண் என்னென்ன காம லீலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு திரைப்படம் வருகிறது . அதே கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து 20க்கு மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்க படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்

இப்போது சமுதாயத்தின் நிலையே சற்று யோசித்து பாருங்கள் !!


கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணை நம்பி யாராவது தன் மகனே கொடுக்க முன் வருவார்களா ???

இதன் பிறகு என்ன ஆகும் கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களை பார்த்தால் ஆட்டோ காரன் கூட உங்களை பற்றி எங்களுக்கு தெரியாதாடி வாடி என்று கையை பிடித்து இழுப்பான் .

இது போன்ற ஒரு நிலையே சமீபத்தில் சினிமா துறையில் நடந்து கொண்டு இருக்கிறது முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதி என்ற ஒரு கருத்து விதைக்க படுகிறது . இதில் நானே பாதிக்கபட்டேன் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஊருக்கு

சென்று கொண்டு இருக்கும் போது ரயில் நண்பர் ஒருவர் கிடைத்தார் அவரிடம் உரையாடி கொண்டிருந்தேன். அவர் என்னை பார்த்தபடியே அய்யோ யோ தாடி லாம் வைத்து இருகிங்கலே நீங்கள் முஸ்லிமா உங்களிடம் பார்த்துலோ பழகனும் என்றார் .

நானும் அவரிடம் வேடிக்கையாக சொன்னேன் தாடி வைப்பவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தவறாக தெரிந்தால் நான் என்ன செய்வது உலகின் மிக பெரிய விஞ்ஞானி எல்லாம் தாடியுடன் தான் புகைபடத்தில் உள்ளார்கள் என்று கூறினேன் .
அந்த நேரத்தில் நான் வேடிக்கையாக பதில் சொன்னாலும் எனக்குள் ஒரு வருத்தம் தான் இந்த மீடியா எந்த அளவு நம்மை சித்தரித்து விட்டது என்று . சாதரணமாக ஒரு பெட்டியை வைத்து விட்டு கொஞ்சம் வெகு தூரம் சென்றாலும் படபடத்து விடுகிறார்கள்

எங்கு வெடி குண்டாக இருக்குமோ என்று .

காரணம் வெளி வருகிற 10 படங்களில் 8 படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி போதிக்கிறது பள்ளி வாசல் செல்கிறார் தொழுகிறார் தொழுதுவிட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார் என்று காட்டபடுகிறது இந்த படத்தை பார்க்கும் சின்ன குழந்தை கூட என்ன

நினைக்கும் உங்கள் அருகில் உள்ள மசூதியில் இறைவணக்கம் செய்ய செல்ல கூடியவர்கள் கூட தீவிரவாதிகள் போல் அது கண்ணனுக்கு தெரியும் .

இதற்க்கு யார் காரணம் ????? நீங்களே யோசியுங்கள் என் சகோதரர்களே

நடப்பதை தானே காட்டுகிறோம் என்று ஒரு கருத்தை சொன்னாலும் நான் மேலே சொன்ன கால் சென்டர் உவமை கூட பல இடங்களில் உண்மை சம்பவமாக நடந்தேறியுள்ளது தான் .ஒரு IT நிறுவனத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்ட போது அதிலிருந்து

அதிகமான condoms எடுக்க பட்டது . ஒரு விஷயம் உண்மையாக இருந்தாலும் சமுதாயத்திற்கு எது தேவையோ அதையே முன்னிலை படுத்த வேண்டும் அவ்வாறு செய்யாவிடில் எதிர் மறை விளைவுகளை ஏற்படும் .

மீதி விசயத்தை உங்களின் நடுநிலைக்கே விட்டு விடுகிறேன் ........

இரண்டாம் சாரார் எனது முஸ்லிம் நண்பர்கள் :
என் அருமை நண்பர்களே இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது என்று ஒரு திரைப்படம் வந்து உள்ளது அதை நிறுத்த வேண்டும் என்று சொல்லி கொண்டு நாம் முகநூலில் வேறு ஒரு தீவிரவாதத்தை நடத்தலாகது . நாம் திரைபடத்தை வெளிபடையாக

அழகிய முறையில் விமர்சிக்கலாம் அதை விட்டு விட்டு அவருடைய குடும்பத்தை விமர்சிப்பது போட்டோகளை தவறாக போட்டு கெட்ட வார்த்தையில் பேசுவது ஒரு முஸ்லீம்க்கு அழகல்ல அதை இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்று தரவும் இல்லை .

ஒரு முறை ஒரு காட்டு அரபி ஒருவர் பள்ளிவாசலில் சிறுநீர் கழிப்பதை கண்ட நபிகளாரின் தோழர்களுக்கு கோபம் பொங்கி வந்தது அவரை அடிக்க சென்றார்கள் நபி (ஸல் ) சொன்னார்கள் அவரை விடுங்கள் முழுவதுமாக சிறுநீர் கழிக்க விடுங்கள்

வரட்டும் பிறகு பேசி கொள்ளலாம் என்று . இவ்வாறு மென்மையாக நடந்து காட்டினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . மென்மையின் மேன்மையாக திகழ்ந்தார்கள்

கெட்ட வார்த்தைகளை பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அருளினார்கள். (நூல் : அஹ்மத் , இப்னு ஹிப்பான் )

ஒரு மனிதன் நினைத்தால் ஒரு சமூகத்தையே ஒன்று படுத்திடவும் இயலும், பிளவு படுத்திடவும் இயலும். இந்த இரு வேறு நிலைகளுக்கும் உதவுவது நாக்கு தான். சின்னஞ்சிறிய இந்த உறுப்புத்தான் பெரும் குழப்பங்கள், பிரச்சினைகள், சண்டைகள், சச்சரவுகள் உருவாகவும் அவற்றை களையவும் பயன்படுகிறது. ஆதலால் இந்த நாவினை பேணி அழகிய முறையில் விவாதியுங்கள்

வெள்ளி, 7 டிசம்பர், 2012

செப்டம்பர் 11 பயங்கரவாதம் என்றால் அப்பம் டிசம்பர் 6 ?

செப்டம்பர் 11 பயங்கரவாதம் என்றால் அப்பம் டிசம்பர் 6 ?

எந்த வித அறிவிப்புமின்றி பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மதத்தின் புனித தன்மை தகர்த்தெறியபட்டது .நீதிமன்றம் எங்கே போனது ? காவல் துறை எங்கே போனது ? மிகபெரிய ஒரு கும்பல் அனைவர் கையிலும் ஆயுதம் எங்கே போனது உளவு துறை ?

இந்த போஸ்ட் ஐ பார்க்கும் ஒவ்வொரு நண்பரும் தன்னகத்தே ஒரு கேள்வி கேட்டு கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் இந்த படத்தை போன்று எங்காவது ஒரு முஸ்லிம் கும்பல் ஒரு மிகபெரிய ஆலயத்தின் கோபுரத்தை இடித்த காட்சியே பார்த்து இருக்கீர்களா ?

சட்டத்தை மிதித்து நீதிமன்றங்களை அவமதித்து வெறும் இன அரசியல் நடத்தும் இந்த காவி பயங்கரவாதிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் எனது இந்து சகோதரனே !

இந்த கள்ளி செடிகளை பிடுங்கி இந்தியாவை உணமையான மதசார்பற்ற இந்தியாவாக காணுவோம் !
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்