பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

கட்டுரைகள்

பொதுவானவை

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஹிந்துக்களே ஆபத்து !

Tamil Hindu 01-04-18
Tamil hindu 01-04-18

ஹிந்துக்களே ஆபத்து !


ஹிந்துக்களே உங்களுக்கு ஆபத்து முஸ்லிம்களால் , கிறித்துவர்களால் , கம்யூனிஸ்ட்களால் , நாத்திகர்களால் என்று கேட்டு கேட்டு பாசிச வெறியேற்ற பட்ட உங்களுக்கு உங்களின் உண்மையான ஆபத்து எதுவென்று தெரியாமல் போயிருக்கலாம். செய்திகளின் பக்கங்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் செய்தி ஓன்று தான் நீ என்றுமே தாழ்த்தப்பட்டவன் நீ என்றுமே எங்களுக்கு அடிமை.

இவர்களின் சூழ்ச்சி அறியாமல் இவர்கள் வலையில் நீங்கள் விழலாம். ஆனால் உண்மையில் நிதர்சனம் எதுவென்று பாருங்கள்.

ஒரு மத்திய அமைச்சர் தலித்துகளை நாய் குறைப்பது போல் என்கிறார். பாஜக ஆளும் குஜராத்தில் குதிரையில் சென்றதற்காக ஒரு வாலிபன் கொல்லப்படுகிறான் .

ஒரு வேலை வடநாட்டில் அந்த வாலிபன் ஒரு முஸ்லிமால் கொல்லப்பட்டால் இந்நேரம் செய்திகள் எப்படி உலா வந்து இருக்கும்.அதற்கு முட்டு கொடுக்க பாசிசவாதிகள் தங்களின் லெட்டர் பேடுகளை கொடூர வார்த்தையால் அலங்கரித்து கொண்டு இருப்பார்கள். இந்துகளுக்காக போராடும் அமைப்புகள் நடத்தும் தலைவர்களோ இந்நேரம் பேரணிக்கு தாயாராக கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு இந்து ஒரு இந்துவால் கொல்லப்பட்டால் செய்தி எப்படி வருகிறது பார்த்தீர்களா ? உயர் சாதியினரால் கொல்லப்பட்டார் என்று அப்பம் அவர் இந்து இல்லையா ?

பாசிசவாதிகளால் ஒரு முஸ்லீம் , முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்படலாம். ஒரு கிறிஸ்துவன் , கிருஸ்துவன் என்பதால் கொல்லப்படலாம். ஆனால் ஒரு ஹிந்து , ஹிந்து என்பதால் கொல்லப்படமாட்டான் கீழ் சாதி என்பதால் கண்டிப்பாக கொல்லப்படுவான்.

அதை தான் சரித்திரம் எங்கும் கண்டுகொண்டிருக்கிறோம் .
பண்டைய இந்தியாவில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.
தனது எல்லா பேட்டிகளிலும் SV சேகர் கூறுகிறார். எங்கேயாவது ஒரு பிராம்மணன் ஒரு கம்யூனல் கிளாஷ்க்கு காரணம்ன்னு சொல்ல முடியுமா ஒரு பிராமணன் மேல ஒரு FIR இருக்கா என்று கேட்கிறார்.

இந்த வார்த்தையை நீங்க திரும்ப திரும்ப கேட்ட உங்களுக்கே விளங்கும். எந்த கலவரத்திலேயும் அவர்கள் கைது ஆவதில்லை பிள்ளையார் ஊர்வலத்தில் முன்னே நின்னு கோஷம் போடுவதில்லை . அப்படி துவேஷ கோஷங்கள் போட்டு கலவரம் ஏற்பட்டு ஜெயிலுக்கு போறவன் யார் பிராமணனா ?அல்லது அப்பாவி இந்துக்களாகிய நீங்களா யோசித்து பாருங்கள் ?

ஆனால் அர்ஜுன் சம்பத் போன்றவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் தயானந்த சரஸ்வதி போன்ற உயர் குலத்தோரே சென்ற ஆண்டு மாட்டை ஏற்றி சென்ற செந்தில் என்பவரை முஸ்லீம் என்று நினைத்து தாக்க சென்றவர்கள் யார் ?
மன்னார்குடி ஜீயர் இப்படி ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். ஹிந்துக்களே உங்களை நோக்கி இந்த பாசிசவாதிகளால் வந்து கொண்டிருக்கும் ஆபத்தை உணராமல் இவர்களிடம் நீங்கள் வீழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் . இவர்களின் சூழ்ச்சி தெரிந்தவர்கள் தப்பித்து கொள்கிறார்கள். இறுதியாக ஒன்றே ஓன்று தான் இந்துகளே உங்களுக்கு ஆபத்து ! முஸ்லிகளாலோ கிருஸ்துவர்களாலோ நாத்திகர்களாலோ இல்லை பிரமணியத்தினால் ... குறிப்பு : எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் அல்ல. பிராமணிய கோட்பாட்டில் இந்த நாடு இயங்க வேண்டும் நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட பாசிசவாதிகளால் மட்டுமே ஆபத்து.
- ஏர்வை ஹசன் நன்றி : தமிழ் இந்து நன்றி : பூங்குன்றன்






ஞாயிறு, 25 மார்ச், 2018

பெண்ணுரிமை




பெண்ணுரிமை 
------------------------
தலாக் தலாக் தலாக் இரண்டு மாதங்களுக்கு முன் எங்கு நோக்கினும் இது தான் சூடான விவாதம் , இஸ்லாம் மனைவிமார்களுக்கு அநிதம் இழைக்கிறது என்ற மாய தோற்றத்தை உருவாக்க முயன்றனர் .
இஸ்லாம் மனைவிக்கு கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் உரிமையை ஒரே ஒரு இஸ்லாமிய சட்டத்தின் மூலம் அழகாக சொல்லிவிடலாம் .
இஸ்லாமிய சட்டப்படி " திருமணம் ஆகாத ஒருவன் விபச்சாரம் செய்தால் 100 சவுக்கடி அதுவே திருமணம் ஆனவன் செய்தால் அவனுக்கு மரண தண்டனை "
இது தான் இஸ்லாம் . இந்தியாவிற்கு தேவை ரெட் லைட் ஏரியா அல்ல இஸ்லாமிய சட்டம்.
அறிக்கை விடும் அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் அரசாங்க அனுமதியுடன் அடுத்த பெண்ணின் கணவரை இன்னொருவளுக்கு கூட்டி கொடுக்கும் செயல்முறையை கைவிட்டுட்டு பிறகு பெண்களின் உரிமையை பற்றி பேசட்டும் ....
- அபுமுஜாஹித்

#ChapelHillShooting

 
Copyright © 2014 ஏர்வை ஹசன்