பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

From our Blog

தத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 மார்ச், 2018

நவீன ஆடை

நவீன ஆடை
---------------------------------
அன்றைய ஆடை உடலை மறைக்க உதவியது
இன்றைய ஆடை உடலை காட்ட உதவுகிறது.

கடன்



மேலே சொன்ன உரையாடல் மாதிரி தான் இன்றைய நிலைமை ஆகி போச்சு . கடன் வாங்கும் போது இருக்கும் அடக்கமும் கண்ணியமும் இருக்க நம்ம ஆளுககிட்ட கடன் வாங்கிய பிறகு அடக்கம் கண்ணியம் எல்லாம் முற்றிலுமாக அடங்கியே போய் விடுகிறது .
நாம பண்ணினா வேலைக்கு கிளைன்ட்க்கு கால் பண்ணி கேட்ட நாளைக்கு வா இன்னைக்கு வா என்று இழுத்து அடிப்பது .போன் பில் பாக்கி வச்சிட்டு நாம என்னமோ கம்பெனி காரன் கடன் கேட்க போன் போட்ட மாதிரி நான் இப்பம் மீட்டிங்கல இருக்கேன் அப்பறம் பண்ணுங்க ன்னு இழுத்து அடிப்பது . இந்த காலத்துலலாம் கடன் வாங்கினவன் தான் சொகுசா இருக்கான் கடன் கொடுத்தவன் கொய்யோ மொய்யோ ன்னு அவன் பின்னாடி நாய் மாதிரி அலைய வேண்டி இருக்கு.
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் ஒரு தோழர் கடனுக்கு கொடுத்த ஒட்டகத்தை கேட்டு வந்தார் . அப்போது நபிகள் நாயகம் அவரிடம் வாங்கிய ஒட்டகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஒட்டகத்தை கொடுத்தார்கள் . அதை வாங்கிய தோழர் இறைவனிடம் பிரார்த்தித்தார் இறைவா என்னிடம் இவர் எப்படி நடந்து கொண்டாரோ அது போல இவருடைய விசயத்தில் நீயும் நல்ல முறையில் நடந்து கொள் என்று .
அப்போது கூடி இருந்த மக்களை பார்த்து சொன்னார்கள் உங்களில் சிறந்தவர் யார் தெரியுமா? உங்களுடைய கடனை அழகிய முறையில் திருப்பி செலுத்துபவர் என்று .
ஆம் நம்மில் அழகு என்பது கோட் சூட் போட்டு டை கெட்டி கொண்டு பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுக்காதவர் அல்லர். மாறாக சிறிய கடனை வாங்கினாலும் அதை கண்ணியமான முறையில் திருப்பி கொடுப்பவரே .
உங்களில் யாரவது இப்படி இருந்த இன்னைக்கே மாத்திகிருங்க .

சனி, 11 அக்டோபர், 2014

மாச கடைசி


மாசம் முதல்ல எவன் கை நெறைய சம்பளம் வாங்குறான் என்பது முக்கியமல்ல மாச கடைசில எவன் கைல காசு இருக்குது என்பது தான் முக்கியம்.

பரகத் என்பது 50000 சம்பளம் வாங்கி மாச கடைசில கைல 500 ரூபாய் வைத்து இருப்பது அல்ல மாறாக 10000 சம்பளமே வாங்கினாலும் மாச கடைசில கைல 1000 ரூபாய் வைத்து இருப்பது தான் .
அல்ஹம்துலில்லாஹ் !
‪#‎மாச_கடைசி‬ ‪#‎பரகத்‬

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மேஸ்திரியும் மேலாளரும்





கட்டிட வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்த அந்த கட்டடத்தில் மேலாளர் ஐந்தாம்  மாடியிலும் மேஸ்திரி முதலாம் மாடியிலும் பணி புரிந்து கொண்டு இருந்தார்கள் .

மேலாளர் மேஸ்திரியை அழைக்க நாடினார்  ஆனால் அங்குள்ள இரைச்சலின் காரணமாக மேஸ்திரியின் காதில் அவரது அழைப்பு விழவில்லை பின் மேஸ்திரியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப மேலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை போட்டார் மேஸ்திரி அதை எடுத்து விட்டு மீண்டும் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பின் மேலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை போட்டார் அதையும் எடுத்து விட்டு தன் பணியை தொடர ஆரம்பித்துவிட்டார் . பின் கடைசியாக மேலாளர் மேலிருந்து ஒரு கல்லை போட்டார் உடனே அது மேஸ்திரியின் மேல் விழுந்து அவருடைய கவனத்தை மேலாளர் பக்கம் திருப்பியது.

இதுவே நம் வாழ்க்கை , இறைவன் தன்னை நினைவு கூறுவதற்கு சிறு நன்மைகளையும் பெரும் நன்மைகளையும் நமக்கு அருள் புரிகிறான். உலக வேலையில் நாம் அதை பெற்று கொண்டு விட்டு கண்டும் காணமால் மீண்டும் நாம் உலக வாழ்க்கையின் பிஸியாக ஆகிவிடுகிறோம்.

பின் நமக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது இறைவனை தொடர்பு கொள்கிறோம்.


இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்

"மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. "

( அல்-குர்ஆன் 10:12)

வெள்ளி, 21 டிசம்பர், 2012

அந்த காலம் - இந்த காலம்


அந்த காலம் :
சாப்பிட்ட பிறகு வெற்றிலை டப்பாவை திறந்தார்கள்
இந்த காலம் :
சாப்பிட்ட பிறகு மருந்து டப்பாவை திறக்கிறார்கள்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

சிறந்த செல்வங்கள்

எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை.

1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)

வியாழன், 8 ஜூலை, 2010

பில் கேட்ஸ் தத்துவம்

 

" I will Always Choose A Lazy Person To Do A Difficult Job Because, He Will Find an Easy Way To Do it "

- Bill Gates

 
Copyright © 2014 ஏர்வை ஹசன்