பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

ஞாயிறு, 25 மார்ச், 2018

கடன்



மேலே சொன்ன உரையாடல் மாதிரி தான் இன்றைய நிலைமை ஆகி போச்சு . கடன் வாங்கும் போது இருக்கும் அடக்கமும் கண்ணியமும் இருக்க நம்ம ஆளுககிட்ட கடன் வாங்கிய பிறகு அடக்கம் கண்ணியம் எல்லாம் முற்றிலுமாக அடங்கியே போய் விடுகிறது .
நாம பண்ணினா வேலைக்கு கிளைன்ட்க்கு கால் பண்ணி கேட்ட நாளைக்கு வா இன்னைக்கு வா என்று இழுத்து அடிப்பது .போன் பில் பாக்கி வச்சிட்டு நாம என்னமோ கம்பெனி காரன் கடன் கேட்க போன் போட்ட மாதிரி நான் இப்பம் மீட்டிங்கல இருக்கேன் அப்பறம் பண்ணுங்க ன்னு இழுத்து அடிப்பது . இந்த காலத்துலலாம் கடன் வாங்கினவன் தான் சொகுசா இருக்கான் கடன் கொடுத்தவன் கொய்யோ மொய்யோ ன்னு அவன் பின்னாடி நாய் மாதிரி அலைய வேண்டி இருக்கு.
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் ஒரு தோழர் கடனுக்கு கொடுத்த ஒட்டகத்தை கேட்டு வந்தார் . அப்போது நபிகள் நாயகம் அவரிடம் வாங்கிய ஒட்டகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஒட்டகத்தை கொடுத்தார்கள் . அதை வாங்கிய தோழர் இறைவனிடம் பிரார்த்தித்தார் இறைவா என்னிடம் இவர் எப்படி நடந்து கொண்டாரோ அது போல இவருடைய விசயத்தில் நீயும் நல்ல முறையில் நடந்து கொள் என்று .
அப்போது கூடி இருந்த மக்களை பார்த்து சொன்னார்கள் உங்களில் சிறந்தவர் யார் தெரியுமா? உங்களுடைய கடனை அழகிய முறையில் திருப்பி செலுத்துபவர் என்று .
ஆம் நம்மில் அழகு என்பது கோட் சூட் போட்டு டை கெட்டி கொண்டு பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுக்காதவர் அல்லர். மாறாக சிறிய கடனை வாங்கினாலும் அதை கண்ணியமான முறையில் திருப்பி கொடுப்பவரே .
உங்களில் யாரவது இப்படி இருந்த இன்னைக்கே மாத்திகிருங்க .
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்