பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

From our Blog

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஹிந்துக்களே ஆபத்து !

Tamil Hindu 01-04-18
Tamil hindu 01-04-18

ஹிந்துக்களே ஆபத்து !


ஹிந்துக்களே உங்களுக்கு ஆபத்து முஸ்லிம்களால் , கிறித்துவர்களால் , கம்யூனிஸ்ட்களால் , நாத்திகர்களால் என்று கேட்டு கேட்டு பாசிச வெறியேற்ற பட்ட உங்களுக்கு உங்களின் உண்மையான ஆபத்து எதுவென்று தெரியாமல் போயிருக்கலாம். செய்திகளின் பக்கங்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் செய்தி ஓன்று தான் நீ என்றுமே தாழ்த்தப்பட்டவன் நீ என்றுமே எங்களுக்கு அடிமை.

இவர்களின் சூழ்ச்சி அறியாமல் இவர்கள் வலையில் நீங்கள் விழலாம். ஆனால் உண்மையில் நிதர்சனம் எதுவென்று பாருங்கள்.

ஒரு மத்திய அமைச்சர் தலித்துகளை நாய் குறைப்பது போல் என்கிறார். பாஜக ஆளும் குஜராத்தில் குதிரையில் சென்றதற்காக ஒரு வாலிபன் கொல்லப்படுகிறான் .

ஒரு வேலை வடநாட்டில் அந்த வாலிபன் ஒரு முஸ்லிமால் கொல்லப்பட்டால் இந்நேரம் செய்திகள் எப்படி உலா வந்து இருக்கும்.அதற்கு முட்டு கொடுக்க பாசிசவாதிகள் தங்களின் லெட்டர் பேடுகளை கொடூர வார்த்தையால் அலங்கரித்து கொண்டு இருப்பார்கள். இந்துகளுக்காக போராடும் அமைப்புகள் நடத்தும் தலைவர்களோ இந்நேரம் பேரணிக்கு தாயாராக கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு இந்து ஒரு இந்துவால் கொல்லப்பட்டால் செய்தி எப்படி வருகிறது பார்த்தீர்களா ? உயர் சாதியினரால் கொல்லப்பட்டார் என்று அப்பம் அவர் இந்து இல்லையா ?

பாசிசவாதிகளால் ஒரு முஸ்லீம் , முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்படலாம். ஒரு கிறிஸ்துவன் , கிருஸ்துவன் என்பதால் கொல்லப்படலாம். ஆனால் ஒரு ஹிந்து , ஹிந்து என்பதால் கொல்லப்படமாட்டான் கீழ் சாதி என்பதால் கண்டிப்பாக கொல்லப்படுவான்.

அதை தான் சரித்திரம் எங்கும் கண்டுகொண்டிருக்கிறோம் .
பண்டைய இந்தியாவில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.
தனது எல்லா பேட்டிகளிலும் SV சேகர் கூறுகிறார். எங்கேயாவது ஒரு பிராம்மணன் ஒரு கம்யூனல் கிளாஷ்க்கு காரணம்ன்னு சொல்ல முடியுமா ஒரு பிராமணன் மேல ஒரு FIR இருக்கா என்று கேட்கிறார்.

இந்த வார்த்தையை நீங்க திரும்ப திரும்ப கேட்ட உங்களுக்கே விளங்கும். எந்த கலவரத்திலேயும் அவர்கள் கைது ஆவதில்லை பிள்ளையார் ஊர்வலத்தில் முன்னே நின்னு கோஷம் போடுவதில்லை . அப்படி துவேஷ கோஷங்கள் போட்டு கலவரம் ஏற்பட்டு ஜெயிலுக்கு போறவன் யார் பிராமணனா ?அல்லது அப்பாவி இந்துக்களாகிய நீங்களா யோசித்து பாருங்கள் ?

ஆனால் அர்ஜுன் சம்பத் போன்றவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் தயானந்த சரஸ்வதி போன்ற உயர் குலத்தோரே சென்ற ஆண்டு மாட்டை ஏற்றி சென்ற செந்தில் என்பவரை முஸ்லீம் என்று நினைத்து தாக்க சென்றவர்கள் யார் ?
மன்னார்குடி ஜீயர் இப்படி ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். ஹிந்துக்களே உங்களை நோக்கி இந்த பாசிசவாதிகளால் வந்து கொண்டிருக்கும் ஆபத்தை உணராமல் இவர்களிடம் நீங்கள் வீழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் . இவர்களின் சூழ்ச்சி தெரிந்தவர்கள் தப்பித்து கொள்கிறார்கள். இறுதியாக ஒன்றே ஓன்று தான் இந்துகளே உங்களுக்கு ஆபத்து ! முஸ்லிகளாலோ கிருஸ்துவர்களாலோ நாத்திகர்களாலோ இல்லை பிரமணியத்தினால் ... குறிப்பு : எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் அல்ல. பிராமணிய கோட்பாட்டில் இந்த நாடு இயங்க வேண்டும் நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட பாசிசவாதிகளால் மட்டுமே ஆபத்து.
- ஏர்வை ஹசன் நன்றி : தமிழ் இந்து நன்றி : பூங்குன்றன்






ஞாயிறு, 25 மார்ச், 2018

பெண்ணுரிமை




பெண்ணுரிமை 
------------------------
தலாக் தலாக் தலாக் இரண்டு மாதங்களுக்கு முன் எங்கு நோக்கினும் இது தான் சூடான விவாதம் , இஸ்லாம் மனைவிமார்களுக்கு அநிதம் இழைக்கிறது என்ற மாய தோற்றத்தை உருவாக்க முயன்றனர் .
இஸ்லாம் மனைவிக்கு கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் உரிமையை ஒரே ஒரு இஸ்லாமிய சட்டத்தின் மூலம் அழகாக சொல்லிவிடலாம் .
இஸ்லாமிய சட்டப்படி " திருமணம் ஆகாத ஒருவன் விபச்சாரம் செய்தால் 100 சவுக்கடி அதுவே திருமணம் ஆனவன் செய்தால் அவனுக்கு மரண தண்டனை "
இது தான் இஸ்லாம் . இந்தியாவிற்கு தேவை ரெட் லைட் ஏரியா அல்ல இஸ்லாமிய சட்டம்.
அறிக்கை விடும் அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் அரசாங்க அனுமதியுடன் அடுத்த பெண்ணின் கணவரை இன்னொருவளுக்கு கூட்டி கொடுக்கும் செயல்முறையை கைவிட்டுட்டு பிறகு பெண்களின் உரிமையை பற்றி பேசட்டும் ....
- அபுமுஜாஹித்

#ChapelHillShooting

நான் - VEG


நான் - VEG

-------------------------------------------------------------------------
நண்பர் : பாய் non-veg சாப்பிடறவங்களுக்கு சகிப்புத்தன்மை ரொம்ப குறைவாம் அப்படின்னு ஒரு article படிச்சேன் . 

ஓ அப்படியா ? இந்த வருசத்துல எத்தன கல்யாண வீடு போயிருபிங்க 

நண்பர் : ஒரு 3 கல்யாண வீடு attend பண்ணிருப்பேன்.

அதுல எத்தனை பாய் வீடு கல்யாணம் எத்தனை பாய் இல்லாத வீடு கல்யாணம் ?

நண்பர் : 2 பாய் வீடு

அப்பம் பாய் வீட்டு கல்யாணத்துல பிரியாணி வச்சு மாட்டி இருபிங்களே

நண்பர் :அட நீங்க வேற நான் சுத்த சைவம் பாய் .

அப்பம் பாய் வீட்ல என்ன சாப்பிட்டிங்க ?

நண்பர் : அதான் பாய் வீட்டு கல்யாணத்துல சைவ சாப்பாடு தனியா வச்சி இருந்தாங்களே.

ம்ம்.. அசைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா சைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அப்பம் பாய் அல்லாத ஒரு கல்யாண வீட்டுக்கு போனிங்களே அங்க சைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா அசைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்களா ?

நண்பர் : அது எப்படி சைவம் அசைவமும் ஒன்னா வைக்க முடியும் ?

ம் அப்பம் சகிப்புத்தன்மை யாருக்கு அதிகம் ? 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நவீன ஆடை

நவீன ஆடை
---------------------------------
அன்றைய ஆடை உடலை மறைக்க உதவியது
இன்றைய ஆடை உடலை காட்ட உதவுகிறது.

அலி பாயும் ஆட்டு குட்டியும்

ஊருக்கு போகும் போது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் வந்த ஆங்கில கதையை பேசி கொண்டு இருக்கும் போது அதே கதையை ஊர் போய் திரும்பி வந்து தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து போட்ட கதை இது.


அலி பாயும் ஆட்டு குட்டியும் 

--------------*****----------------------

அலி பாய் பார்க்க ரொம்ப அப்பாவியான மனுஷன் , பொண்டாட்டி எப்பம் பார்த்தாலும் கரிச்சி கொட்டிகிட்டே இருப்பா.

"இது லாம் ஒரு வீடா இங்க நிம்மதியா தூங்க கூட முடியல " இது தான் அலி பாய் பொண்டாட்டியின் மாமுல் பொலம்பல்.

மனுஷன் பொருத்து பொருத்து பார்த்து கடைசியா அந்த முஹல்லாஹ் ஆலிம்சாட்ட போய் தன் குறையை கொட்டி தீர்த்தார்.

எல்லா விசயத்தையும் பொறுமையா கேட்டுவிட்டு ஆலிம்சா கேட்டாரு உன் வீட்ல எத்தனை ஆடு இருக்கு இவரு சொன்னாரு 20 ஆடுன்னு , சரி அந்த இருபது ஆடையும் இரவு ஆனா உன் வீட்டுகுள்ள 40 நாள் அடைச்சி வை .

அலி பாயும் ஆலிம்சா சொன்ன மாதிரி இரவு ஆனா இருபது ஆட்டையும் வீட்ல அடைத்து வைத்தார்.
வழக்கத்தை விட இப்பம் பொண்டாட்டி பொலம்பல் இன்னும் அதிகமானது " மனுஷன் படுக்கவே இங்க இடம் இல்ல இதுல ஆடு வேறயா"

நாட்கள் ஆக ஆக பொலம்பல் கூடி கொண்டே போனது , மீண்டும் ஆலிம்சாவிடம் வந்து விசயத்தை சொன்னார் , ஆலிம்சா சொன்னார் 40 நாள் முடியட்டும் அப்புறம் ஆட்டை எல்லாம் வழக்கம் போல வெளிய விட்டுவிட்டு தூங்க செல் .

40 நாட்களும் கழிந்தது வழக்கம் போல ஆட்டை வெளியே கட்டிவிட்டு வீட்டில் உறங்க சென்றார் ,

மனைவி பெரும் மூச்சு விட்டு சொன்னாள் அப்பா இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு எவ்வளவு ராகத்தா இருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேர் இப்படி தான் இருக்கிறோம் நமக்கு கொடுக்க பட்ட அருளை பற்றி எண்ணுவதில்லை அதை விட பெரியதை பற்றியே சிந்திக்கிறோம் , நாம் இருப்பதை விட கீழ் நிலைக்கு செல்லும் போது தான் நாம் இருந்த நிலையின் அருமையை உணர்கிறோம்.

அது போல் நமக்கு வரும் எந்த துன்பமும் நிலையானது அல்ல

" நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."

இறைவேதம் ( அத்தியாயம் 94: வசனம் 5)

கல்வி

அன்று - எழுத்தறிவித்தவன் ஆசிரியர்
இன்று -  எழுத்தையும் அறிவையும் விற்றவன் ஆசிரியர்
சேவையாக இருந்த கல்வி இன்று வியாபாரமாக ஆகிவிட்டது 
-அபு முஜாஹித் 

ஜும்மா மேடை

நான் கண்ட பெரும்பான்மையான ஜூம்மாகளில் இமாம் தர்ம சிந்தனை பற்றி இஸ்லாம் கூறும் கூற்றை பேசி முடிந்த பிறகு தொழுகைக்கு பின் நிர்வாக தலைவர் எழுந்து அமைப்பின் தேவைகளையும் பள்ளியின் தேவைகளையும் மக்களிடையே கேட்பார் .
ஆனால் அதே ஜூம்மாகளில் கலிபா உமரின் ஆட்சியை பற்றியும் ஏனைய இஸ்லாமிய ஆட்சியரை பற்றியும் பேசி முடிந்த பிறகு எந்த நிரவாகியும் எழுந்து எனது நிர்வாகத்தில் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை

கடன்



மேலே சொன்ன உரையாடல் மாதிரி தான் இன்றைய நிலைமை ஆகி போச்சு . கடன் வாங்கும் போது இருக்கும் அடக்கமும் கண்ணியமும் இருக்க நம்ம ஆளுககிட்ட கடன் வாங்கிய பிறகு அடக்கம் கண்ணியம் எல்லாம் முற்றிலுமாக அடங்கியே போய் விடுகிறது .
நாம பண்ணினா வேலைக்கு கிளைன்ட்க்கு கால் பண்ணி கேட்ட நாளைக்கு வா இன்னைக்கு வா என்று இழுத்து அடிப்பது .போன் பில் பாக்கி வச்சிட்டு நாம என்னமோ கம்பெனி காரன் கடன் கேட்க போன் போட்ட மாதிரி நான் இப்பம் மீட்டிங்கல இருக்கேன் அப்பறம் பண்ணுங்க ன்னு இழுத்து அடிப்பது . இந்த காலத்துலலாம் கடன் வாங்கினவன் தான் சொகுசா இருக்கான் கடன் கொடுத்தவன் கொய்யோ மொய்யோ ன்னு அவன் பின்னாடி நாய் மாதிரி அலைய வேண்டி இருக்கு.
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் ஒரு தோழர் கடனுக்கு கொடுத்த ஒட்டகத்தை கேட்டு வந்தார் . அப்போது நபிகள் நாயகம் அவரிடம் வாங்கிய ஒட்டகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஒட்டகத்தை கொடுத்தார்கள் . அதை வாங்கிய தோழர் இறைவனிடம் பிரார்த்தித்தார் இறைவா என்னிடம் இவர் எப்படி நடந்து கொண்டாரோ அது போல இவருடைய விசயத்தில் நீயும் நல்ல முறையில் நடந்து கொள் என்று .
அப்போது கூடி இருந்த மக்களை பார்த்து சொன்னார்கள் உங்களில் சிறந்தவர் யார் தெரியுமா? உங்களுடைய கடனை அழகிய முறையில் திருப்பி செலுத்துபவர் என்று .
ஆம் நம்மில் அழகு என்பது கோட் சூட் போட்டு டை கெட்டி கொண்டு பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுக்காதவர் அல்லர். மாறாக சிறிய கடனை வாங்கினாலும் அதை கண்ணியமான முறையில் திருப்பி கொடுப்பவரே .
உங்களில் யாரவது இப்படி இருந்த இன்னைக்கே மாத்திகிருங்க .
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்