ஊருக்கு போகும் போது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் வந்த ஆங்கில கதையை பேசி கொண்டு இருக்கும் போது அதே கதையை ஊர் போய் திரும்பி வந்து தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து போட்ட கதை இது.

அலி பாயும் ஆட்டு குட்டியும்
--------------*****----------------------
அலி பாய் பார்க்க ரொம்ப அப்பாவியான மனுஷன் , பொண்டாட்டி எப்பம் பார்த்தாலும் கரிச்சி கொட்டிகிட்டே இருப்பா.
"இது லாம் ஒரு வீடா இங்க நிம்மதியா தூங்க கூட முடியல " இது தான் அலி பாய் பொண்டாட்டியின் மாமுல் பொலம்பல்.
மனுஷன் பொருத்து பொருத்து பார்த்து கடைசியா அந்த முஹல்லாஹ் ஆலிம்சாட்ட போய் தன் குறையை கொட்டி தீர்த்தார்.
எல்லா விசயத்தையும் பொறுமையா கேட்டுவிட்டு ஆலிம்சா கேட்டாரு உன் வீட்ல எத்தனை ஆடு இருக்கு இவரு சொன்னாரு 20 ஆடுன்னு , சரி அந்த இருபது ஆடையும் இரவு ஆனா உன் வீட்டுகுள்ள 40 நாள் அடைச்சி வை .
அலி பாயும் ஆலிம்சா சொன்ன மாதிரி இரவு ஆனா இருபது ஆட்டையும் வீட்ல அடைத்து வைத்தார்.
வழக்கத்தை விட இப்பம் பொண்டாட்டி பொலம்பல் இன்னும் அதிகமானது " மனுஷன் படுக்கவே இங்க இடம் இல்ல இதுல ஆடு வேறயா"
நாட்கள் ஆக ஆக பொலம்பல் கூடி கொண்டே போனது , மீண்டும் ஆலிம்சாவிடம் வந்து விசயத்தை சொன்னார் , ஆலிம்சா சொன்னார் 40 நாள் முடியட்டும் அப்புறம் ஆட்டை எல்லாம் வழக்கம் போல வெளிய விட்டுவிட்டு தூங்க செல் .
40 நாட்களும் கழிந்தது வழக்கம் போல ஆட்டை வெளியே கட்டிவிட்டு வீட்டில் உறங்க சென்றார் ,
மனைவி பெரும் மூச்சு விட்டு சொன்னாள் அப்பா இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு எவ்வளவு ராகத்தா இருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேர் இப்படி தான் இருக்கிறோம் நமக்கு கொடுக்க பட்ட அருளை பற்றி எண்ணுவதில்லை அதை விட பெரியதை பற்றியே சிந்திக்கிறோம் , நாம் இருப்பதை விட கீழ் நிலைக்கு செல்லும் போது தான் நாம் இருந்த நிலையின் அருமையை உணர்கிறோம்.
அது போல் நமக்கு வரும் எந்த துன்பமும் நிலையானது அல்ல
" நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."
இறைவேதம் ( அத்தியாயம் 94: வசனம் 5)

அலி பாயும் ஆட்டு குட்டியும்
--------------*****----------------------
அலி பாய் பார்க்க ரொம்ப அப்பாவியான மனுஷன் , பொண்டாட்டி எப்பம் பார்த்தாலும் கரிச்சி கொட்டிகிட்டே இருப்பா.
"இது லாம் ஒரு வீடா இங்க நிம்மதியா தூங்க கூட முடியல " இது தான் அலி பாய் பொண்டாட்டியின் மாமுல் பொலம்பல்.
மனுஷன் பொருத்து பொருத்து பார்த்து கடைசியா அந்த முஹல்லாஹ் ஆலிம்சாட்ட போய் தன் குறையை கொட்டி தீர்த்தார்.
எல்லா விசயத்தையும் பொறுமையா கேட்டுவிட்டு ஆலிம்சா கேட்டாரு உன் வீட்ல எத்தனை ஆடு இருக்கு இவரு சொன்னாரு 20 ஆடுன்னு , சரி அந்த இருபது ஆடையும் இரவு ஆனா உன் வீட்டுகுள்ள 40 நாள் அடைச்சி வை .
அலி பாயும் ஆலிம்சா சொன்ன மாதிரி இரவு ஆனா இருபது ஆட்டையும் வீட்ல அடைத்து வைத்தார்.
வழக்கத்தை விட இப்பம் பொண்டாட்டி பொலம்பல் இன்னும் அதிகமானது " மனுஷன் படுக்கவே இங்க இடம் இல்ல இதுல ஆடு வேறயா"
நாட்கள் ஆக ஆக பொலம்பல் கூடி கொண்டே போனது , மீண்டும் ஆலிம்சாவிடம் வந்து விசயத்தை சொன்னார் , ஆலிம்சா சொன்னார் 40 நாள் முடியட்டும் அப்புறம் ஆட்டை எல்லாம் வழக்கம் போல வெளிய விட்டுவிட்டு தூங்க செல் .
40 நாட்களும் கழிந்தது வழக்கம் போல ஆட்டை வெளியே கட்டிவிட்டு வீட்டில் உறங்க சென்றார் ,
மனைவி பெரும் மூச்சு விட்டு சொன்னாள் அப்பா இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு எவ்வளவு ராகத்தா இருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேர் இப்படி தான் இருக்கிறோம் நமக்கு கொடுக்க பட்ட அருளை பற்றி எண்ணுவதில்லை அதை விட பெரியதை பற்றியே சிந்திக்கிறோம் , நாம் இருப்பதை விட கீழ் நிலைக்கு செல்லும் போது தான் நாம் இருந்த நிலையின் அருமையை உணர்கிறோம்.
அது போல் நமக்கு வரும் எந்த துன்பமும் நிலையானது அல்ல
" நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."
இறைவேதம் ( அத்தியாயம் 94: வசனம் 5)
கருத்துரையிடுக