பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

From our Blog

ஞாயிறு, 25 மார்ச், 2018

நான் - VEG


நான் - VEG

-------------------------------------------------------------------------
நண்பர் : பாய் non-veg சாப்பிடறவங்களுக்கு சகிப்புத்தன்மை ரொம்ப குறைவாம் அப்படின்னு ஒரு article படிச்சேன் . 

ஓ அப்படியா ? இந்த வருசத்துல எத்தன கல்யாண வீடு போயிருபிங்க 

நண்பர் : ஒரு 3 கல்யாண வீடு attend பண்ணிருப்பேன்.

அதுல எத்தனை பாய் வீடு கல்யாணம் எத்தனை பாய் இல்லாத வீடு கல்யாணம் ?

நண்பர் : 2 பாய் வீடு

அப்பம் பாய் வீட்டு கல்யாணத்துல பிரியாணி வச்சு மாட்டி இருபிங்களே

நண்பர் :அட நீங்க வேற நான் சுத்த சைவம் பாய் .

அப்பம் பாய் வீட்ல என்ன சாப்பிட்டிங்க ?

நண்பர் : அதான் பாய் வீட்டு கல்யாணத்துல சைவ சாப்பாடு தனியா வச்சி இருந்தாங்களே.

ம்ம்.. அசைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா சைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அப்பம் பாய் அல்லாத ஒரு கல்யாண வீட்டுக்கு போனிங்களே அங்க சைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா அசைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்களா ?

நண்பர் : அது எப்படி சைவம் அசைவமும் ஒன்னா வைக்க முடியும் ?

ம் அப்பம் சகிப்புத்தன்மை யாருக்கு அதிகம் ? 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நவீன ஆடை

நவீன ஆடை
---------------------------------
அன்றைய ஆடை உடலை மறைக்க உதவியது
இன்றைய ஆடை உடலை காட்ட உதவுகிறது.

அலி பாயும் ஆட்டு குட்டியும்

ஊருக்கு போகும் போது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் வந்த ஆங்கில கதையை பேசி கொண்டு இருக்கும் போது அதே கதையை ஊர் போய் திரும்பி வந்து தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து போட்ட கதை இது.


அலி பாயும் ஆட்டு குட்டியும் 

--------------*****----------------------

அலி பாய் பார்க்க ரொம்ப அப்பாவியான மனுஷன் , பொண்டாட்டி எப்பம் பார்த்தாலும் கரிச்சி கொட்டிகிட்டே இருப்பா.

"இது லாம் ஒரு வீடா இங்க நிம்மதியா தூங்க கூட முடியல " இது தான் அலி பாய் பொண்டாட்டியின் மாமுல் பொலம்பல்.

மனுஷன் பொருத்து பொருத்து பார்த்து கடைசியா அந்த முஹல்லாஹ் ஆலிம்சாட்ட போய் தன் குறையை கொட்டி தீர்த்தார்.

எல்லா விசயத்தையும் பொறுமையா கேட்டுவிட்டு ஆலிம்சா கேட்டாரு உன் வீட்ல எத்தனை ஆடு இருக்கு இவரு சொன்னாரு 20 ஆடுன்னு , சரி அந்த இருபது ஆடையும் இரவு ஆனா உன் வீட்டுகுள்ள 40 நாள் அடைச்சி வை .

அலி பாயும் ஆலிம்சா சொன்ன மாதிரி இரவு ஆனா இருபது ஆட்டையும் வீட்ல அடைத்து வைத்தார்.
வழக்கத்தை விட இப்பம் பொண்டாட்டி பொலம்பல் இன்னும் அதிகமானது " மனுஷன் படுக்கவே இங்க இடம் இல்ல இதுல ஆடு வேறயா"

நாட்கள் ஆக ஆக பொலம்பல் கூடி கொண்டே போனது , மீண்டும் ஆலிம்சாவிடம் வந்து விசயத்தை சொன்னார் , ஆலிம்சா சொன்னார் 40 நாள் முடியட்டும் அப்புறம் ஆட்டை எல்லாம் வழக்கம் போல வெளிய விட்டுவிட்டு தூங்க செல் .

40 நாட்களும் கழிந்தது வழக்கம் போல ஆட்டை வெளியே கட்டிவிட்டு வீட்டில் உறங்க சென்றார் ,

மனைவி பெரும் மூச்சு விட்டு சொன்னாள் அப்பா இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு எவ்வளவு ராகத்தா இருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேர் இப்படி தான் இருக்கிறோம் நமக்கு கொடுக்க பட்ட அருளை பற்றி எண்ணுவதில்லை அதை விட பெரியதை பற்றியே சிந்திக்கிறோம் , நாம் இருப்பதை விட கீழ் நிலைக்கு செல்லும் போது தான் நாம் இருந்த நிலையின் அருமையை உணர்கிறோம்.

அது போல் நமக்கு வரும் எந்த துன்பமும் நிலையானது அல்ல

" நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."

இறைவேதம் ( அத்தியாயம் 94: வசனம் 5)
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்